Monday, October 18, 2010

1...2...3...4 [சவால் சிறுகதை]

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
 
4) "திருந்தி வாழணும்னு நினைச்ச என்னை புரிஞ்சுக்கிட்டு, இன்ஸ்பெக்டரா இருந்தும் சிவா காதலிச்சார். நீ அதை சாதகமாக்கி, என் குடும்பத்தை அழிச்சுடுவேன்னு தினம் தினம் பயமுறுத்தி அவரோட டிபார்ட்மென்ட் ரகசியங்கள் - டைமண்ட் பேரு வெச்ச இந்த டாப் சீக்ரெட் பைல் கொண்டு வர சொன்னே!! எவ்வளவோ கஷ்டங்கள், அடிபட்டு  ஹாஸ்பிட்டல்ல இருந்தும் உனக்காக கொண்டு வந்திருக்கேன். ஆனா நீ என் குழந்தையை கொன்னுட்டே!!! என்னை நம்பி என் நெற்றியில் பொட்டு வெச்சவன், நெற்றி பொட்டுல துப்பாக்கி வெச்சு என்னை விசாரிக்கும்போது... கண்ணீர் மல்க இதை சொல்லும்போது... இதுக்கு மேலயும் நான்..." என்று காமினி சொல்லி முடிப்பதற்குள், முகம் வெளிறிய பரந்தாமன் அவளை கொல்ல நினைக்கும்பொழுதே, பின்னாலிருந்து சிவா அவனை வெறித்தனமாக சுட்டுக் கொன்றான்.
 

No comments:

Post a Comment